Propellerads
Navigation

வித்தியாசமான பரிசு கொடுத்த மணமகன்

தங்களின் திருமண நிகழ்வுக்கு வருகை தந்த விருந்தினர்களுக்கு 100 ஹெல்மெட் மற்றும் 1000 மரக்கன்றுகளை பரிசாக வழங்கிய சம்பவம் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

வடக்கு கர்நாடகாவின் பிதார் பகுதியில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்திவரும் சிவ்ராஜ் (27) என்பவருக்கும் சவிதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.

இவர்கள் தங்கள் திருமணத்துக்கு வருகை தந்தவர்களுக்கு வித்தியாசமான பரிசுகளை தந்து அசத்தியுள்ளனர்.

'திருமணங்கள் பெரும்பாலும் ஆடம்பரமாக தான் நடத்தப்படுகின்றன. மது, இசை நிகழ்ச்சி என செலவு செய்கின்றனர். அதனால் நான் ஏதாவது அர்த்தமுள்ளதாக செய்ய விரும்பினேன்' என, மணமகன் தெரிவித்துள்ளார்.

ஹெல்மெட் அணியாததால் சாலை விபத்துகளால் பல பேர் உயிரிழப்பதை தினம் செய்திகளின் மூலம் தெரிந்து கொள்கிறோம்.

அதனால,; ஹெட்மெட் வழங்கி சிலரின் உயிரை காப்பாற்றலாம் என்று திருமணத்தில் ஹெட்மெட்டை பரிசுகளாக வழங்கினோம் என்றார்.

மிகவும் கடினப்பட்டு தன் வீட்டாரையும், பெண் வீட்டாரையும் சிவ்ராஜ் சம்மதிக்க வைத்துள்ளார்.
Share
Banner

Post A Comment: