Propellerads
Navigation

உறவுக்கு மறுத்த கள்ளக்காதலியை கொலை செய்த காதலன்!

மாணவர் விடுதியில் உடலுறவுக்கு உடன்படாத வேலைக்கார பெண்மணியை கொடூரமாக வெட்டிக் கொன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள மூக்கூடல் பகுதியில் வசித்து வரும் ஆனந்தி (வயது 38) என்பவருக்கும் சந்திரசேகரன் என்பவருக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர்.

ஆனந்தியின் கணவர் சந்திரசேகரன் இறந்துவிடவே விடுதியில் சமையல் வேலைக்கு சென்று தன் வாழ்க்கையை நடத்தி வந்தார்.

இந்நிலையில், அவர் விடுதியில் தனியாக இருக்கும் வேளையில் விடுதிக்கு வந்த நபர், ஆனந்தியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாக்கு வாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் ஆனந்தியை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். சம்பவ இடத்திலெயே ஆனந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இந்த வெறிச் செயலை செய்தது ஆனந்தியின் காதலன் செல்லப்பா என்பது தெரியவந்தது.

'ஆனந்தியின் கணவர் இறந்த பிறகு அவர் தனியாக வசித்து வந்தார் .அவரின் தனிமையை எனக்கும் சாதகமாக பயன்படுத்திக்கொண்டேன்.

'மாணவர் விடுதிக்கு சமையல் வேலைக்கு ஆனந்தி சென்ற பின்னர் என்னுடன் பேசுவதை குறைத்துக்கொண்டார். இதனால் ஆனந்திக்கு வேறு யாருடனும் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகப்பட்டேன்.

'நேற்று காலை மாணவர்கள் பள்ளிக்கு சென்ற பின்னர் விடுதிக்குள் சென்றேன். அங்கு தனியாக இருந்த ஆனந்தியிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறினேன்.

'அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே அங்கு கிடந்த அரிவாளால் சரமாரியாக ஆனந்தியை வெட்டினேன்.' என, கைதுசெய்யப்பட்டுள்ள செல்லப்பா தெரிவித்துள்ளார்.
Share
Banner

Post A Comment: