Propellerads
Navigation

நயன்தாரா வில்லனாக கவுதம் மேனன்

'டிமாண்டி காலனி' படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்க்ததில் புதிய படம் உருவாகவிருக்கிறது. இந்த படத்தில் ஹீரோவாக அதர்வா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், நயன்தாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் நயன்தாரா போலீஸ் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் இன்னொரு கதாநாயகியும் இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் இப்படத்தில் வில்லனாக நடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான செய்தி வெளிவரும் காத்திருப்போம்.

இப்படத்திற்கு ‘இமைக்கா நொடிகள்’ என்று தலைப்பு வைத்துள்ளார். கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சி.ஜெயக்குமார் இப்படத்தை தயாரித்து வருகிறார். இது இந்நிறுவனம் தயாரிக்கும் 3-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 
Share
Banner

Post A Comment: