இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமார் அவ்வப்போது சில படங்களில் நடிகராகவும் நடித்து வந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘தங்கமகன்’ படத்தில் தனுஷுக்கு அப்பாவாக நடித்து முழுநேர நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வரத் தொடங்கியிருக்கிறார்.
அந்த வரிசையில் தற்போது சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் சூர்யாவுக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு ஜோடியாக சரண்யா பொன்வண்ணன் நடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.
சூர்யா-விக்னேஷ் சிவன் இணையும் படம் இந்த வருடத்தின் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சூர்யாவுக்கு 35-வது படமாகும். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். ஆக்ஷன் மற்றும் பொழுதுபோக்கு படமாக இது உரவாகவிருக்கிறது. இப்படத்தை கே.ஈ.ஞானவேல்ராஜாவும், சூர்யாவும் இணைந்து தயாரிக்கின்றனர்.
அந்த வரிசையில் தற்போது சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் சூர்யாவுக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு ஜோடியாக சரண்யா பொன்வண்ணன் நடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.
சூர்யா-விக்னேஷ் சிவன் இணையும் படம் இந்த வருடத்தின் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சூர்யாவுக்கு 35-வது படமாகும். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். ஆக்ஷன் மற்றும் பொழுதுபோக்கு படமாக இது உரவாகவிருக்கிறது. இப்படத்தை கே.ஈ.ஞானவேல்ராஜாவும், சூர்யாவும் இணைந்து தயாரிக்கின்றனர்.


Post A Comment: