நடிகர் பகவதி பாலா
நடிகை காயத்திரி
இயக்குனர் பகவதி பாலா
இசை விஜய் பிரபு
ஓளிப்பதிவு பகவதி பாலா
நடிகை காயத்திரி
இயக்குனர் பகவதி பாலா
இசை விஜய் பிரபு
ஓளிப்பதிவு பகவதி பாலா
ஒரு வீட்டில் வசிக்கும் மூன்று நண்பர்கள் பெண்களை ஏமாற்றி தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களைக் கெடுத்துக் கொன்று விடுகின்றனர். ஒருநாள் ஹீரோயின் காயத்ரி தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடி வருகிறார். மூன்று நண்பர்களில் ஆட்டோ டிரைவராக வரும் பகவதி பாலா காயத்ரி மற்றும் அவரது காதலனை ஏமாற்றி தங்களது வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து காயத்ரியின் காதலனைக் கொன்று விடுகின்றனர். காதலனை காப்பாற்றப் போராடும் காயத்ரியையும் அடித்து விடுகின்றனர். இதில் காயத்ரி மயக்கமடைந்து விடுகிறார். ஆனால், காயத்ரி இறந்து விட்டதாகக் கருதும் மூவரும் வீட்டின் தோட்டக்காரனை அழைத்து நாயகியை வீட்டிற்கு பின்னால் புதைத்து விடும்படி கூறுகின்றனர்.
இதற்கிடையில் காயத்ரி உயிரோடு இருப்பதை அறிந்த தோட்டக்காரன் அவர் மீது இரக்கம் கொண்டு தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அடைக்கலம் கொடுக்கிறார். நண்பர்கள் மூவரும் தங்கியிருக்கும் வீட்டின் சொந்தக்காரர் அமெரிக்காவிலிருந்து வர, தோட்டக்காரன் மற்றும் வீட்டின் உரிமையாளர் உதவியுடன் காயத்ரி அந்த வீட்டில் வந்து தங்குகிறார்.
வீட்டில் அவரைப் பார்க்கும் நண்பர்கள் மூவரும் காயத்ரி பேய் வடிவில் வந்து விட்டதாக பயப்படுகின்றனர். அதற்கேற்றவாறு காயத்ரியும் பேய் போல நடித்து நண்பர்கள் மூவரையும் மிரட்டுகிறார். ஒருகட்டத்தில் காயத்ரிக்கு உண்மையிலேயே பேய் பிடிக்கிறது. இறுதியில் காயத்ரியைப் பிடித்த பேய் அவளைவிட்டு விலகியதா? நண்பர்கள் மூவரும் திருந்தினார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
'தலையாட்டி பொம்மை' என தலைப்பு வைத்து பேய்க்கதை ஒன்றை திகிலுடன் சொல்ல இயக்குனர் பகவதி பாலா முயற்சி செய்திருக்கிறார். ஆனால், தொடர்பில்லாத கதை, வலுவில்லாத திரைக்கதை, மோசமான ஒளிப்பதிவு, தெரிந்த நடிகர்கள் இல்லாதது போன்றவற்றால் அவரின் முயற்சி ரசிகர்களைக் கவரவில்லை.
மொத்தத்தில் 'தலையாட்டி பொம்மை' தள்ளாட்டம்.
நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து காயத்ரியின் காதலனைக் கொன்று விடுகின்றனர். காதலனை காப்பாற்றப் போராடும் காயத்ரியையும் அடித்து விடுகின்றனர். இதில் காயத்ரி மயக்கமடைந்து விடுகிறார். ஆனால், காயத்ரி இறந்து விட்டதாகக் கருதும் மூவரும் வீட்டின் தோட்டக்காரனை அழைத்து நாயகியை வீட்டிற்கு பின்னால் புதைத்து விடும்படி கூறுகின்றனர்.
இதற்கிடையில் காயத்ரி உயிரோடு இருப்பதை அறிந்த தோட்டக்காரன் அவர் மீது இரக்கம் கொண்டு தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அடைக்கலம் கொடுக்கிறார். நண்பர்கள் மூவரும் தங்கியிருக்கும் வீட்டின் சொந்தக்காரர் அமெரிக்காவிலிருந்து வர, தோட்டக்காரன் மற்றும் வீட்டின் உரிமையாளர் உதவியுடன் காயத்ரி அந்த வீட்டில் வந்து தங்குகிறார்.
வீட்டில் அவரைப் பார்க்கும் நண்பர்கள் மூவரும் காயத்ரி பேய் வடிவில் வந்து விட்டதாக பயப்படுகின்றனர். அதற்கேற்றவாறு காயத்ரியும் பேய் போல நடித்து நண்பர்கள் மூவரையும் மிரட்டுகிறார். ஒருகட்டத்தில் காயத்ரிக்கு உண்மையிலேயே பேய் பிடிக்கிறது. இறுதியில் காயத்ரியைப் பிடித்த பேய் அவளைவிட்டு விலகியதா? நண்பர்கள் மூவரும் திருந்தினார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
'தலையாட்டி பொம்மை' என தலைப்பு வைத்து பேய்க்கதை ஒன்றை திகிலுடன் சொல்ல இயக்குனர் பகவதி பாலா முயற்சி செய்திருக்கிறார். ஆனால், தொடர்பில்லாத கதை, வலுவில்லாத திரைக்கதை, மோசமான ஒளிப்பதிவு, தெரிந்த நடிகர்கள் இல்லாதது போன்றவற்றால் அவரின் முயற்சி ரசிகர்களைக் கவரவில்லை.
மொத்தத்தில் 'தலையாட்டி பொம்மை' தள்ளாட்டம்.
Post A Comment: