விஜய் ஆண்டனி நடித்து வெளியான 'பிச்சைக்காரன்' படத்தில் அம்மா வேடத்தில் நடித்தவர் தீபா ராமானுஜம். அம்மாவை மையப்படுத்திய கதை என்பதால் அதற்கு முன்பு பசங்க-2, ரஜினிமுருகன் போன்ற படங்களில் நடித்திருந்தபோதும் பிச்சைக்காரன் படம் தீபா ராமானுஜத்துக்கு பெரிய ஓப்பனிங்கை கொடுத்துள்ளது.
அதையடுத்து 'இது நம்ம ஆளு' உள்பட சில படங்களிலும் அம்மா வேடங்களில் நடித்து களத்தில் உள்ள சில அம்மா நடிகைகளுக்கு பெரும் போட்டியாக வளர்ந்து வருகிறார் தீபா ராமானுஜம்.
மேலும், பிச்சைக்காரன் படத்தில் அவரது நடிப்பு குறித்து டைரக்டர் சசி பெருமையாக சொன்னதால், இப்போது வேறு சில முன்னணி டைரக்டர்களின் படங்களிலும் ஒப்பந்தமாகியிருக்கிறார் தீபா ராமானுஜம்.
அதோடு, இது நம்ம ஆளு படத்தில் நயன்தாராவுக்கு அம்மாவாக நடித்தபோது தீபாவின் இயல்பான நடிப்பு நயன்தாராவை கவர்ந்து விட்டதாம். அதனால் இப்போது தனக்கு வேண்டப்பட்ட சில டைரக்டர்களிடமும் ஒரு நல்ல அம்மா நடிகை இருக்கிறார் என்று சொல்லி தீபா ராமானுஜத்தின் பெயரை பரிந்துரை செய்கிறாராம் நயன்தாரா.


Post A Comment: