இசையமைப்பாளரின் மகனாக இருந்தாலும் தந்தையின் பெயரை பயன்படுத்த விரும்பாமல் முறைப்படி நடிப்பு உள்பட திரைப்பட ஹீரோவுக்கு உரிய அனைத்து பயிற்சிகளையும் பெற்று தற்போது ஹீரோவாகியுள்ளார்.கடந்த 90ஆம் ஆண்டுகளில் உள்ள அள்ளித்தந்த பாடல்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் சிற்பி. இவரது இசையில் உருவான நாட்டாமை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்கொடி, உன்னை நினைத்து போன்ற பல படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றன.
இந்த நிலையில் இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் தற்போது 'பள்ளிப்பருவத்திலேயே என்ற படத்தின் மூலம் ஹீரோவாகியுள்ளார்.
தனுஷூக்கு ஒரு 'துள்ளுவதோ இளமை' போல நந்தன்ராமுக்கு ஒரு 'பள்ளிப்பருவத்திலேயே' என்று கூறப்படும் அளவுக்கு இந்த படத்தில் அழுத்தமான பள்ளிப்பருவத்து கதை உள்ளதாம்


Post A Comment: