Propellerads
Navigation

தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் பட புதிய தகவல்

தனுஷ் இயக்கிய 'ப.பாண்டி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வடசென்னை' படத்தில் நடித்து வருகிறார். மேலும் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படமும் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தனுஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்தார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நாள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.

என்னுடைய படங்கள் எப்போதும் தரமாகவும் அதே நேரத்தில் மாஸ் ஆகவும் இருக்க வேண்டும் என்று விரும்புவேன். கார்த்திக் சுப்புராஜின் இந்த படம் எனது விருப்பத்தை முழுமையாக நிறைவேற்றும் என்று நம்புவதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.

இரண்டு இளம் திறமையான கலைஞர்கள் இணையும் இந்த படம் நிச்சயம் வித்தியாசமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share
Banner

Post A Comment: