‘பாகுபலி-2’ படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால், இன்று அதிகாலையில் இருந்தே தியேட்டர்களில் கூட்டம் அலை மோதியது. தமிழ்நாட்டில் 650 தியேட்டர்களிலும், இந்தியா முழுவதும் 6 ஆயிரத்துக்கும் அதிக மான தியேட்டர்களில் வெளியானது.
‘பாகுபலி-2’ தமிழ் பதிப்பை வெளியிடுவது தொடர்பாக தயாரிப்பாளருக்கும், வினியோகஸ்தருக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தமிழ்நாட்டில் இந்த படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
இதற்கிடையே ‘பாகுபலி-2’ படம் இணைய தளத்தில் வெளி யாகி உள்ளது. முதலில் இந்த படத்தின் ஒரு சில காட்சிகள் இணைய தளத்தில் வெளியாகின. பின்னர் 30 நிமிட காட்சிகள் வெளியிடப்பட்டது. பின்னர் முழு படமும் இணைய தளத்தில் வெளியானது. இதன் தமிழ், தெலுங்கு, இந்தி பதிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த படம் 2 மணி 40 நிமிடங்கள் ஓடுகிறது.
படம் ரிலீஸ் ஆகி ஒரு சில நிமிடங்களிலேயே முழு படமும் இணைய தளத்தில் வெளியானதால், படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே ஆயிரக்கணக்கானோர் இந்த படத்தை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இணைய தளத்தில் படம் வெளியானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. ‘பாகுபலி-2’ வெளியான இணைய தளங்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து சைபர்கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: