சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று நடைபெற்று வந்தபோது அங்கிருந்த புகைப்பட பத்திரிகையாளர்களுக்கும் படக்குழுவினர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த பிரச்சனையின்போது புகைப்பட பத்திரிகையாளர்களை '2.0' படத்தின் படக்குழுவினர் தாக்கியதாகவும், இதுகுறித்து கொடுக்கப்பட்ட போலீஸ் புகார் காரணமாக இயக்குனர் ஷங்கரின் உறவினர் மற்றும் அவரது உதவி இயக்குமருமான பப்பு என்பவர் கைது செய்யப்பட்டதாகவும், அவருடன் மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
இதுகுறித்து லைகா தரப்பினர்களிடம் நாம் பேசியபோது, 'படப்பிடிப்பில் வெறும் வாக்குவாதம் மட்டுமே நடந்ததாகவும், யாரையும் 2.0 படக்குழுவினர் தாக்கவில்லை என்றும் தற்போது தான் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று கொண்டிருப்பதாகவும், இன்னும் சில நிமிடங்களில் என்ன நடந்தது என்பதை முழுமையாக ஊடகத்திற்கு விளக்கம் அளிக்கவிருப்பதாகவும் கூறினர்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
விடையளிக்க மறுப்பது கவலையளிக்கின்றது #UmaOya #Uva
Anonymous Jul 29 2017நோர்வூட் பகுதியில் விபத்து #Norwood #Accident
Anonymous Jul 29 2017ஹாலி-எல ரயில் தண்டவாளத்தில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு #Hali-Ela #Girl #Dead
Anonymous Jul 29 2017சிறையில் இருக்கும் பிரபல நடிகரின் மனைவி கர்ப்பம்?
Anonymous Jul 29 2017'தலைவன் இருக்கின்றான்' அரசியலில் களமிறங்கும் கமல்ஹாசன்
Anonymous Jul 29 2017
Click here to load more...
Post A Comment: