காதலித்து வந்த போது ஒரே பிளாட்டில் வசித்த வந்த ரன்பீரும், கத்ரீனாவும், இப்போது அவர்களது காதல் பிரேக் ஆகிவிட்டதால் தனித்தனியாக சென்றுவிட்டனர். ரன்பீர் தன் குடும்பத்தோடு தங்கி வருகிறார். கத்ரீனா, வாட்டர்பீல்டு பகுதியில் வசித்து வந்தார், இப்போது அங்கிருந்து வேறு வீட்டிற்கு செல்ல முடிவெடுத்துள்ளார்.
இதனால், மும்பையில் வாடகைக்கு வீடு தேடி வருகிறார் கத்ரீனா. கத்ரீனாவுக்கு சல்மானின் மேலாளர் ரேஷ்மா ஷெட்டியும் உதவி வருகிறார். மும்பையில் பாந்த்ரா பகுதியில் சில வீடுகளை கத்ரீனாவும், ரேஷ்மாவும் சென்று பார்த்துள்ளனர். ஆனால் கத்ரீனாவுக்கு பார்த்த வீடுகள் யாவும் திருப்தியளிக்கவில்லை. இதனால் தொடர்ந்து வீடு தேடும் வேட்டையில் இறங்கியுள்ளார் கத்ரீனா.

Post A Comment: