பாலிவுட்டின் ஹாட் குயினாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த மஸ்திஜாதே படம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் இப்படத்தில் ஆபாச வார்த்தைகள் அதிகம் இருந்தன. தற்போது சில படங்களில் நடித்து வரும் சன்னி லியோன், விரைவில் சொந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்க இருக்கிறார்.
இதுஒருபுறம் இருக்க, அவர் சிறு கதைகளும் எழுதபோகிறாராம். இந்தியன் பப்ளிசர்ஸ்க்கு சுமார் 12 முதல் 15 வரை சிறு கதைகள் எழுதி கொடுக்க போகிறாராம். மேலும் இந்த கதைகளை ஆன்-லைனிலும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இது சன்னி லியோனின் சொந்த கதை கிடையாதாம், ஒவ்வொரு விதமான சம்பவங்களை மையப்படுத்தி இந்த கதையை அவர் எழுத திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Post A Comment: