நடிகர் அனில் கபூரின் வாரிசு சோனம் கபூர். தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் ஷாரூக்கான், அமீர்கான் போன்ற நடிகர்கள் சகிப்புத்தன்மை குறித்து பேசியது சர்ச்சை ஏற்படுத்தியது.
இதுப்பற்றி சோனம் கபூர் கூறியிருப்பதாவது... ''அனைவருக்கும் பேச உரிமை உள்ளது. அமீர்கான், ஷாரூக்கான் போன்றோர் பேசிய கருத்துக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். ஆனால் உண்மையில் பாதிபேர் தாங்கள் சொல்ல வந்த விஷயத்தை தைரியமாக சொல்வது கிடையாது.
காரணம் நெகட்டீவ்வாக எதுவும் பிரச்னையாகி விடுமோ என்று அவர்களுக்குள் ஒருவித பயம். ஆகையால் தைரியமாக பேசுபவர்களுக்கு நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Post A Comment: