பொலிவூட் நடிகர் ரன்பீர் கபூருடன் முத்தக்காட்சியில் நடிக்க நடிகை ஐஸ்வர்யா ராய் மறுத்து விட்டாராம்.
கரன் ஜோகர் இயக்கும் ஏ தில் ஹை முஸ்கில் திரைப்படத்தில் ரன்பீர் கபூருடன் ஐஸ்வர்யா ராய் மற்றும் அனுஷ்கா சர்மா நடித்து வருகின்றார்.
இந்தத் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கும், ரன்பீர் கபூருக்கும் ஒரு முத்தக்காட்சி உள்ளதாம்.
ஆனால், திருமணத்துக்குப் பிறகு ஐஸ்வர்யா ராய் யாருடனும் முத்தக்காட்சிகளில் நடிப்பதில்லையாம்.
இதனால் முத்தக்காட்சியை ஐஸ்வர்யா ராய்க்கு பதிலாக அனுஷ்கா சர்மாவுக்கு வைத்துள்ளாராம் இயக்குநர்.
முத்தக்காட்சிகளில் அனுஷ்கா சர்மாவும், மற்ற காட்சிகளில் ஐஸ்வர்யா ராயும் நடிக்கிறார்களாம்.
ஏ தில் ஹை முஸ்கில் திரைப்படம் அடுத்த ஆண்டு ஒக்டோபர் 28ஆம் திகதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. -
Post A Comment: