Propellerads
Navigation

சிம்புவின் 'கான்' படத்தை மீண்டும் தொடர்வது எப்போது?

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக ந்டைபெற்று வருகிறது. இந்நிலையில் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்திற்கு முன்னர் செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வந்த படம் 'கான்'

இந்த படத்தின் படப்பிடிப்பு ஒருசில நாட்கள் நடைபெற்ற நிலையில் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக்கும் வெளிவந்து சிம்பு ரசிகர்களின் பாராட்டை பெறது. ஆனால் எதிர்பாராத காரணத்தால் திடீரென இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இருப்பினும் நேரம் வரும்போது மீண்டும் 'கான்' படத்தை தொடர உள்ளதாக செல்வராகவன் விளக்கம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடி வரும் செல்வராகவன் மீண்டும் 'கான்' படம் எப்போது தொடரும் என்பது குறித்த தகவலை அறிவித்துள்ளார். தனக்கும் சிம்புவுக்கும் எவ்வித பிரச்சனையும் இல்லை என்றும், சிம்பு தனக்கும் யுவன்ஷங்கர் ராஜாவுக்கும் நெருங்கிய நண்பராகவே தொடர்ந்து இருப்பதாகவும் விரைவில் 'கான்' படத்தை தொடரவுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த படம் தங்களை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வகையில் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
Share
Banner

Post A Comment: