Propellerads
Navigation

பாகுபலி 2 வீடியோ வௌியானது: வீடியோ எடிட்டர் கைது

இந்தியாவின் பிரமாண்டமான திரைப்படங்களில் ஒன்றாகிய “பாகுபலி” திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் 'பாகுபலி'யை கட்டப்பா ஏன் கொலை செய்தார்' என்ற இரகசியம் உள்பட அனைத்து விடயங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

 இந்நிலையில், இந்த திரைப்படத்தின் ஒருசிறிய வீடியோ க்ளிப், சமூக இணையதளங்களில் லீக் ஆகியது. மிகப்பெரிய பாதுகாப்பையும் மீறி இந்த திரைப்படத்தின் க்ளிப்பிங்ஸ் லீக் ஆனது பாகுபலி 2' திரைப்படக்குழுவினர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. இதுகுறித்து சைபர் க்ரைம் பொலிஸாரிடம் புகார் செய்யப்பட்டது

இந்த புகாரின்பேரில் விசாரணை செய்த பொலிஸார், கிருஷ்ணா என்பவரை கைது செய்துள்ளனர். இவர் இந்த திரைப்படத்தின் வீடியோ எடிட்டராக பணிபுரிந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: