Propellerads
Navigation

வனராஜா தனியார் தோட்டக் குடியிருப்பில் தீ

ஹட்டன்,டிக்கோயா தெற்கு வனராஜா தனியார் தோட்டக் குடியிருப்பில் சனிக்கிழமை இரவு 7.45 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரு வீடுகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.


இதன்போது வீட்டிலிருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து, அயலவர்கள் சென்று அவர்களை மீட்டுள்ளனர். இதனால் எந்ததொரு உயிர் சேதம் ஏற்படவில்லை. இருப்பினும் தீயினை 2 மணித்தியாலங்களுக்கு பின்னரே கட்டுப்பாட்டுக்குள் அப்பிரதேச மக்கள் கொண்டு வந்துள்ளனர்.

இதனால் வீட்டிலிருந்த ஆவணங்கள்,  தங்க நகைகள், தளபாடங்கள், ஏனைய பாவனை பொருட்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன. மேலும் குறித்த குடியிருப்பிலிருந்த, 3 குடும்பங்களைச் சேர்ந்த 7 மாத குழந்தைகள் உட்பட 10 பேர் தற்காலிகமாக, தோட்ட காரியாலங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
- See more at: .dpuf
Share
Banner

Post A Comment: