Propellerads
Navigation

புதிய கூட்டொப்பந்தத்தை வலியுறுத்தி ஹட்டன் நகரில் துண்டுப்பிரசுரம்

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில், புதிய கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜே.வி.பியின், அகில இலங்கைத் தோட்ட தொழிலாளர் சங்கம், ஹட்டன் நகரில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை, இன்று (09) விநியோகித்தது.

2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த கூட்டொப்பந்தம், கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமே, மீண்டும் கைச்சாத்திடப்பட்டது. 2015 ஆம் ஆண்டின்படி கணக்கிட்டால், 2017 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதிக்குப் பின்னர், மீண்டும் ஓர் ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டிருக்க வேண்டும். ஆனால், தொழிற்சங்கங்கள் அதனை செய்யத் தவறியுள்ளன.

எனவே, மீண்டும் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்ட வேண்டும் என்பதை வலியுறுத்தியே இத்துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
Share
Banner

Post A Comment: