Propellerads
Navigation

'தளபதி 61' படத்தில் இருந்து வெளியேறியது ஏன்?

அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தில் மூன்று நாயகிகள் என்று முடிவு செய்த பின்னர் அவர்கள் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா என்று தான் முதலில் உறுதி செய்யப்பட்டது. இந்த தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு முதல்கட்ட படப்பிடிப்புக்கு முன்னர் ஜோதிகா போட்டோஷூட்டிலும் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒருசில நாட்களுக்கு முன்னர் ஜோதிகா திடீரென 'தளபதி 61' படத்தில் இருந்து விலகினார். தற்போது ஜோதிகா நடிக்கவிருந்த கேரக்டரில் நித்யாமேனன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஜோதிகா' தளபதி 61' படத்தில் இருந்து விலக சூர்யாவும், அவரது குடும்பத்தினர்களும் தான் காரணம் என்று சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவியது. இதுகுறித்து இதுவரை விளக்கம் அளிக்காமல் மெளனமாக இருந்த ஜோதிகா முதல்முறையாக இதுகுறித்து பேட்டில் ஒன்றில் கூறியதாவது:

'விஜய் 61' படத்தில் நடிக்காததற்கு எனது கணவர் சூர்யாவும், எனது குடும்பத்தினரும் காரணமல்ல. வெளியிலிருந்து வரும் அழுத்தத்திற்காக, யாரும் கடைசி நேரத்தில் படத்திலிருந்து வெளியேற மாட்டார்கள். எனக்கு அந்த படத்தில் சில பிரச்சனைகள் இருந்தது. அவை பின்னர் சுமூகமாக முடித்து வைக்கப்பட்டது. அது என்ன பிரச்சனைகள் என்பது குறித்து இங்கு விவாதிக்க விரும்பவில்லை. ஆனால் சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யானவை.” என்று மனம் திறந்து கூறினார்.
Share
Banner

Post A Comment: