Propellerads
Navigation

லைகாவிடம் கைமாறும் விஸ்வரூபம்-2


கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்-2' திரைப்படம் சில வருடங்களாக கிடப்பில் கிடக்கிறது. விஸ்வரூபம் படம் எடுத்தபோதே இரண்டாம் பாகத்திற்கு தேவையான முக்கால் வாசியை படமாக்கிவிட்டார் கமல், விஸ்வரூபம் படத்திற்கு கிடைத்த கிரேஸால் விஸ்வரூபம்-2 படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் வாங்கினார். ஆனால் அதன்பின்னர் அவருக்கு ஏற்பட்ட பண நெருக்கடியால் விஸ்வரூபம்-2 கிடப்பில் போடப்பட்டது. இப்போது பிரச்சனைகள் தீர்ந்து 'விஸ்வரூபம்-2' விரைவில் வெளியாகிறது.

இது குறித்து கமலின் இணை இயக்குநரும், 'தூங்காவனம்' படத்தை இயக்கியவருமான ராஜேஷ் எம்.செல்வா தனது ட்விட்டர் பக்கத்தில், ''விஸ்வரூபம்-2' படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டது. இப்படத்தின் தெலுங்கு, ஹிந்தி பதிப்புகளுக்கான டப்பிங் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 'விஸ்வரூபம்' முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் சூப்பராக வந்திருக்கிறது, ஹேப்பி'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் 'விஸ்வரூபம்-2' இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஆஸ்கார் ரவி கொடுத்த பணத்தை அவருக்கு செட்டில் பண்ணிவிட்டு 'விஸ்வரூபம்-2' படத்தை லைகாவிடம் கைமாற்ற கமல் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
Share
Banner

Post A Comment: