Propellerads
Navigation

பாஜகவுக்கு ஆதரவளித்த மராட்டிய சகோதர சகோதரிகளுக்கு பிரதமர் மோடி நன்றி

புதுடெல்லி: மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக பெருவாரியன வார்டுகளை பிடித்துள்ளது. பாஜகவிற்கு ஆதரவளித்த மராட்டிய சகோதர சகோதரிகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகின. மொத்தம் 227 வார்டுகளில் சிவசேனா: 84, பா.ஜ.க 80, காங்கிரஸ்: 31, தேசியவாத காங்கிரஸ்: 9, நவநிர்மாண் சேனா: 7, மற்றவை: 7 இதில் பாஜக பெருவாரியான வார்டுகளை பிடித்தது.

இந்த தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

மராட்டிய மாநிலத்தில் பாஜக என்றுமே வலுவான நிலையில் உள்ளதை உள்ளாட்சி முடிவுகள் காட்டுகிறது. பாஜக மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்த மராட்டிய சகோதர சகோதரிகள் மற்றும் பொதுமக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Share
Banner

Post A Comment: