Propellerads
Navigation

ஜெயலலிதா குறித்து யுவனின் தைரியமான கருத்து

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இடத்தை அவ்வளவு எளிதில் யாராலும் நிரப்ப முடியாது என்ற உண்மை அனைவருக்கும் தெரிந்திருந்த போதிலும் தங்களுடைய பணம், பதவியை காப்பாற்றி கொள்வதற்காக அவருடைய இடத்தை பிடிக்க ஒருசிலர் முயன்று வருகின்றனர்.

ஆனால் ஒவ்வொரு உண்மையான அதிமுக தொண்டனும், அம்மா ஜெயலலிதா இடத்தில் வேறு ஒருவரை வைத்து பார்க்க தயாராக இல்லை. இதே கருத்தை மிக தைரியமாக பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஒரே ஒரு எம்ஜிஆர், ஒரே ஒரு புரட்சித்தலைவி அம்மா., இந்த இருவருக்கு மாற்றாக வேறு ஒருவர் இல்லை' என்று யுவன்ஷங்கர் ராஜா பதிவு செய்துள்ளார். யுவனின் இந்த தைரியமான கருத்தை ஆயிரக்கணக்கானோர் ஆதரித்து அவருடைய பதிவுக்கு லைக் செய்து வருகின்றனர்.
Share
Banner

Post A Comment: