Propellerads
Navigation

'தெறி' தோல்வி அடைந்திருந்தால்...

கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியான விஜய்-அட்லி கூட்டணியில் உருவான 'தெறி' திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியதால் படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் நாயகிகளில் ஒருவரான சமந்தா, இந்த படத்தின் வெற்றியால் தான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

'தெறி' படத்தின் ரிலீஸ் தினத்தில் இந்த படத்தின் ரிசல்ட் எப்படி இருக்குமோ என்று தான் பதட்டத்துடன் இருந்ததாகவும், முதல்காட்சி முடிந்தபின்னர் சோஷியல் மீடியாவில் இந்த படம் குறித்து பாசிட்டிவ் ரிப்போர்ட் வந்தபின்னர்தான் தான் நிம்மதி அடைந்ததாகவும் கூறினார்.

மேலும் ஒருவேளை 'தெறி' படம் தோல்வி அடைந்திருந்தால் சினிமாவை விட்டு விலகுவது குறித்து தான் ஆலோசிக்க இருந்ததாகவும், ஆனால் நல்லவேளையாக அதற்கு அவசியம் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமந்தாவின் முந்தைய படங்களான '10 எண்றதுக்குள்ள', தங்கமகன்' ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: